தன்னம்பிக்கைக்கு வழிகாட்டும் தலைவர்கள்
மாணவர்களின் தன்னம்பிக்கை உணர்வை தூண்டும் வகையில் இப்புத்தகத்தில் தலைவர்கள் முதல் தன்னம்பிக்கையை ஊன்றுகோலாக கொண்டு செயலாற்றி கொண்டு வருபவர்களை பற்றியும் எழுதியுள்ளேன்.
AUTHOR NAME : ஜெ. ரெக்ஸ் பால்
PAGES : 112
நான் Good Shepherd Matric. Hr. Sec. பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வராகவும், Rex Matric. Hr. Sec, பள்ளி மற்றும் St. John’s Nursery & Primary பள்ளியின் தாளாளரும் ஆவேன். நெல்லை மாவட்டத்தில் மாவடி என்னும் அழகான கிராமத்தில் திரு. செவாலியர் Dr. D.ஜான் பொன்னுதுரை திருமதி சரோஜா பொன்னுதுரை ஆகியோரது மூத்த புதல்வனாகப் பிறந்தேன். நாங்கள் இன்று கல்வியிலும், கல்வித்துறையிலும் கடந்த 84 ஆண்டுகளாக உலா வருகிறோம் என்றால் அதற்கு காரணம் என் தாத்தாவும் என் தந்தையும்தான் என்பதில் பெருமிதம் கொள்வேன். என் தாத்தா எஸ். சுப்பையா திரவியராஜ் இந்து நடுநிலை பள்ளி என்னும் பெயரில் மூன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் திறம்பட நடத்தி வந்தார். அதை தொடர்ந்து என் தந்தையும் கல்விப்பணியில் செயலாற்றினார். அவர்களை தொடர்ந்து நானும் கடந்த 28 ஆண்டுகளாக கல்வி பணியில் செயலாற்றி வருகிறேன்.